2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் முன்வைக்கப்படும் எனவும், அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தங்கலை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு ,
‘டிசம்பர் மாதம் இடைக்கால கணக்கறிக்கை முன்வைக்கப்படும். அதன்பின்னர் எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதமளவில் வரவு – செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.
அந்த வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். வறுமையான மக்கள், ஊனமுற்றோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்படும்.
இலங்கைக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டாக 2025 ஆம் ஆண்டை மாற்றியமைப்போம்.
எப்போதும் கொடுப்பனவு மற்றும் நிவாரணத்தால் வாழும் மக்கள் கூட்டத்தைவிட, அவர்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குரிய திட்டங்களும் பாதீட்டில் முன்வைக்கப்படும்.” – என்றார்.