“எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பின்னடைவு ஏற்படவில்லை. பொதுத்தேர்தலில் அக்கட்சி இலகுவில் சாதாரணப் பெரும்பான்மை பலத்தை பெறும்.” – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியை வருமாறு,
“ ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் போன்ற தேசிய மட்ட தேர்தல்களால் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் தொடர்பில் பெரிதாக கவனம் செலுத்தப்படவில்லை. அப்படி இருந்தும் தேசிய மக்கள் சக்திக்கு 15 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனை பின்னடைவு எனக் கூறமுடியாது. முதலாம் இடத்தை பிடித்த கட்சிக்கும், இரண்டாம் இடத்தை பிடித்த கட்சிக்கும் இடையில் நிறைய வித்தியாசம் உள்ளது.
பொதுத்தேர்தல் என்பது தேசிய மட்ட தேர்தல். மக்கள் வாக்களிப்பதில் ஆர்வமாக உள்ளது. எனவே, தேசிய மக்கள் சக்தி சாதாரண பெரும்பான்மையை இலகுவில் பெறும். தேசிய மக்கள் சக்தியைவிட அக்கட்சியினருக்கு பின்னால் உள்ள கம்யூனிஸ்ட் சித்தாந்தம்மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, அக்கட்சியினரால் நீண்ட பயணத்தை செல்ல முடியும் என நம்புகின்றேன்.
தேசிய மக்கள் சக்தியில் வாக்கு கேட்கும் எண்ணம் எனக்கு இல்லை. கிடைத்துள்ள மாற்றத்தை அவர்கள் சிறப்பாக முன்னெடுத்து செல்ல வேண்டும்.” – என்றார்.










