மொரட்டுவ விபத்தில் இரு சிறுமிகள் பலி – கர்ப்பிணி தாய் படுகாயம்!

மொரட்டுவ பகுதியில் புதிய காலி வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் அவர்களின் தாயான கர்ப்பிணி பெண்ணும் படுகாயமடைந்துள்ளார்.

இவர்கள் பாதையை கடக்க முற்பட்டவேளை, வேகமாக வந்த மோட்டார் சைக்கிளொன்று அவர்கள்மீது மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஒன்று மற்றும் 7  வயதுடைய சிறுமிகளே உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் பானந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles