ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பதவியில் நிச்சயம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கட்சி தலைவரின் பலவீனம் காரணமாகவே தான் ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு வெளியேறியதாகவும், எதிர்க்கட்சி தலைவர் பதவியில் மட்டும் அல்ல ஐக்கிய மக்கள் சக்தி தலைமைப்பதவியிலும் மாற்றம் அவசியம் எனவும் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
எனினும், கட்சி தலைமைப்பதவியில் மாற்றம் செய்யப்படமாட்டாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
