கனடா பறந்தார் சிறீதரன் எம்.பி.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று கனடாவுக்குப் பயணமாகியுள்ளார்.

கனேடிய வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார்.

இந்தப் பயணத்தின்போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சின் இந்தோ – பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதி அமைச்சர் வெல்டன் எப்பை சந்தித்து அவர் உரையாடவுள்ளார்.

இந்தச் சந்திப்பு கனடாவின் – ஒட்டோவாவில் உள்ள வெளி விவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது, பொறுப்புக்கூறல், இந்தோ – பசுபிக் பிராந்தியத்தின் சமகால அரசியல் சூழல்கள், தமிழ் மக்களின் நெருக்கடிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகப் பேசப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய பிரதி அமைச்சருடனான சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் பங்கேற்கவுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியிருக்கவுள்ள சிறீதரன் எம்.பி. அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles