மகா கும்பமேளா விழாவில் கூட்ட நெரிசல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு!

உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர் எனவும், 60 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளாவில் புனித நீராடுவது மிகவும் புண்ணிய நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் ஜனவரி 13-ம் திகதி முதல் 28-ம் திகதி வரை 16 நாட்களில் 15 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

மகா கும்பமேளாவின்போது, குறிப்பாக மவுனி அமாவாசை போன்ற சிறப்பு நாட்களில் நீராடுவது பாவங்களை போக்கி ‘மோட்சம்’ அல்லது முக்திஅளிக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

இதனால் நேற்று அதிகாலை முதலே கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடும் இடத்துக்கு வந்துள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் லட்சக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டனர்.

ஆற்றுப்பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு பக்தர்கள் இறங்கியபோது திடீரென கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கூட்ட நெரிசலில் சிக்கிய சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும், சிலர் கீழே விழுந்துள்ளனர். இதனால், கீழே விழுந்தவர்கள் மீது மற்றவர்களும் விழுந்துள்ளனர். அப்போது பயம் காரணமாக கீழே விழுந்தவர்கள் மீது பலர் ஏறிக் குதித்து ஓடியுள்ளனர். பலர் அங்குமிங்கும் ஓடியதால் அந்த இடமே போர்க்களம்போல காணப்பட்டுள்ளது. இதனால் பலர் மயங்கி விழுந்துள்ளனர்.

இதையடுத்து பொலிஸார், தீயணைப்பு வீரர்கள், துணை ராhணுவப் படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு உதவியாக தன்னார்வ தொண்டர்களும் செயல்பட்டனர். நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles