ரணிலால் மட்டுமே நாட்டை மீட்க முடியும்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது எனவும், ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே இந்நாட்டை மீட்க முடியும் எனவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

” வருட இறுதியாக்கும்போது தற்போதைய அரசாங்கத்தால் தாக்கு பிடிக்க முடியாத நிலை ஏற்படும். 4 வருடங்களில் தேர்தலுக்கு செல்வார்களாம். அது பொய். தற்போதைய அரசாங்கத்துக்கு பயணிக்க முடியாது. தேர்தலுக்கு முன்னரே அரசாங்கம் மாறக்கூடும்.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே நாட்டை மீட்க முடியும். சவாலை ஏற்கக்கூடிய தலைவர் அவர் மட்டுமே. எனவே, ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு தயாராவோம்.” – எனவும் ராஜித சேனாரத்ன அறைகூவல் விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles