‘நத்தார் பண்டிகையன்று சிறைக்கைதிகளை பார்வையிடமுடியாது’

நத்தார் பண்டிகை தினத்தில் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு இம்முறை அனுமதி வழங்கப்படமாட்டாது என சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.

” வழமையாக நத்தார் பண்டிகை தினத்தன்று சிறைகளில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்கள் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இம்முறை அதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாது.

சிறைச்சாலை கொத்தணிமூலம் இதுவரை 3 ஆயிரத்து 268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கில் 2 ஆயிரத்து 268 பேர் குணமடைந்துள்ளனர்.” – என்று சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles