ஜனநாயகத்தை வேட்டையாட இடமளியோம்: சஜித் சூளுரை!

 

“ அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அடிபணியப்போவதில்லை. ஜனநாயகத்தை வேட்டையாடுவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகள் நிச்சயம் தோற்கடிக்கப்படும்.”

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார்.

” அரசாங்கத்தின் அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறைகளுக்கு நாம் அடிபணியப்போவதில்லை. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயார். அதற்காக மக்கள் அணிதிரள வேண்டும்.

மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக எதிரணி தரப்பில் இருந்து வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் நாம் வழங்குவோம். நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்காக என்றும் நாம் முன்னிலையாவோம்.” – எனவும் சஜித் குறிப்பிட்டார்.

 

Related Articles

Latest Articles