சிஐடி வசமாகிறது மஹிந்த தங்கியுள்ள அரச மாளிகை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள அரச மாளிகை, குற்றப் புலனாய்வு பிரிவு திணைக்களத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என அறியமுடிகின்றது.

அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இது பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை நீக்குவதற்குரிய சட்டமூலம் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதனை விரைவில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

மேற்படி சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னர், அது பற்றி சபைக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ச வசிக்கும் விஜேராம மாவத்தை வீடு சிஐடிக்கு வழங்கப்படவுள்ளது என வெளியான தகவல் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் நேற்று வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்,
‘ அமைச்சர்களுக்கு தற்போது அதிகாரப்பூர்வ வதிவிடங்கள் ஒதுக்கப்படவில்லை. 51 அதிகாரப்பூர்வ வதிவிடங்கள் உள்ளன. அவை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும்.

அரசாங்க நிறுவனங்களை நடத்துவதற்கு சில இடங்கள் தேவைப்படுகின்றன.அதற்காக சில விதிவிடங்கள் பயன்படுத்தப்படும். சிஐடிக்கு இந்த வதிவிடம்தான், அந்த விதிவிடம்தான் என முடிவெடுக்கவில்லை. ஆனால் சிஐடிக்கு இடமொன்று கோரப்பட்டுள்ளது. இது பற்றி எதிர்காலத்தில் முடிவெடுக்கப்படும்.” – என்று குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles