மண்டைதீவு மனிதப் புதைகுழி: நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1991ஆம் ஆண்டு தீவகத்தை இராணுவம் கைப்பற்றியது. அந்தச் சமயம், மண்டைதீவில் உயிருடன் பிடிபட்ட பொதுமக்களில் பலர் இராணுவத்தினராலும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட துணைக் குழுக்களாலும் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்கள் தேவாலயக் காணியில் உள்ள கிணறு உட்பட 3 கிணறுகளில் போடப்பட்டு மூடப்பட்டன என்று கூறப்படுகின்றது.

இது தொடர்பில் விசாரணை நடத்தி அந்தக் கிணறுகளைச் சட்ட ரீதியாக அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவங்களுக்குக் கண்கண்ட சாட்சியங்கள் மற்றும் மதகுருமார் சிலரும் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கான வசதிகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்து. இதையடுத்து இந்த வழக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவிடம் பாரப்படுத்தப்பட்டது.

அத்துடன், மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்குப் பொலிஸார் கால அவகாசம் கோரியமையால் வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles