காஷ்மீரின் குல்காம் பகுதியில் 200 இடங்களில் சோதனை

டெல்​லி​யில் நிகழ்ந்த தாக்​குதலில் தடை செய்​யப்​பட்ட ஜமாத்​-இ-இஸ்​லாமி (ஜெஇஐ) தீவிர​வாத அமைப்​புக்கு தொடர்பு இருப்​பது முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

இதையடுத்​து, காஷ்மீரின் குல்​காம் மாவட்​டத்​தில் உள்ள ஜமாத்​-இ-இஸ்​லாமி அமைப்​புடன் தொடர்​புடைய 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் பொலிஸாரும் பாது​காப்​புப் படை​யினரும் நேற்று சோதனை நடத்​தினர்

இது​போல சோபூர் மாவட்​டத்​தில் உள்ள 25-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் அம்​மாவட்ட காவல் துறை​யினரும் பாது​காப்​புப் படை​யினரும் இணைந்து ஒரே நேரத்​தில் சோதனை நடத்​தினர். சோதனை நடை​பெற்ற இரு மாவட்​டங்​களி​லும் முக்​கிய ஆவணங்​கள், டிஜிட்​டல் சாதனங்​கள் உள்​ளிட்​டவை பறி​முதல் செய்​யப்​பட்​டன. மேலும் இது​வரை சுமார் 500 பேரிடம் விசா​ரணை நடத்தி உள்​ள​தாக பொலி ஸார் தெரி​வித்​துள்​ளனர்.

Related Articles

Latest Articles