ரணில் விக்கிரமசிங்க பௌத்த தரிசனங்களின் அடிப்படைகள் அடிப்படையில் செயல்படும் தலைவராவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று விசேட ஊடக சந்திப்பை அவர் நடத்தினார்.
இதன்போது பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சந்திரிக்கா நிதி உதவி வழங்கியுள்ளார். ரணில் என்ன செய்தார் என அவரிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த வஜிர அபேவர்தன கூறியவை வருமாறு,
“ ரணில் விக்கிரமசிங்க பௌத்த தர்மத்தின் அடிப்படையில் செயல்படும் தலைவர். எனவே, அவர் எந்த சந்தர்ப்பத்திலும் சொத்துகளை குவிப்பது கிடையாது.
தனது பெயரில் நிதியம் ஆரம்பிக்கமாட்டார். தனது பெயரில் வீதியை திறக்கமாட்டார். மக்களுக்கு அறிவை அனுபவத்தை மக்களுக்கு வழங்குவார். வழங்குவார்.பணத்தைவிட இதுவே மிக முக்கியம்.
ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவத்தில் இருந்து இந்த அரசாங்கம் பயன் பெறவில்லை. இந்த அரசாங்கத்துக்கு அனுபவமும் இல்லை.” என்றார்.
