சீனாவின் உயர்மட்ட தலைவர் இலங்கை விஜயம்!

சீனாவின் உயர்மட்ட அரசியல் தலைவர் ஒருவர் கொழும்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி அவரது விஜயம் இடம்பெறும் என்று ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீன அரசாங்கத்தின் மூன்றாவது அதிஉயர் அதிகாரம் படைத்தவரான, சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியல் குழு தலைவரான சோ லெஜி என்பவரே இரு நாள் விஜயமாக இலங்கை வருகின்றார்.

பேரிடருக்குப் பின்னர், இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவும், அமெரிக்காவும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகின்றது.

இந்நிலையிலேயே தமது உதவி திட்டத்தை விஸ்தரிக்கும் நடவடிக்கையில் சீனாவும் இங்கியுள்ளது.

இலங்கை வரும் சீன உயர்மட்ட தலைவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மற்றும் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

Related Articles

Latest Articles