பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசுரிய பதவி விலகவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
கல்விக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு தொடர்பிலேயே அவர் இவ்வாறு பதவி விலகவேண்டும் என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
அதேவேளை, புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் நாமல் கூறினார்.
