ட்ரம்பின் நடவடிக்கைக்கு எதிராக போராடுவோம்: வாசு!

“வெனிசுலாமீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு ஜனாதிபதியை கடத்தி சென்றுள்ள ட்ரம்பின் நடவடிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தேசப்பற்றுள்ள வெனிசுவா மக்கள் அந்நாட்டு ஜனாதிபதிக்காக வீதியில் இறங்குவார்கள்.” – என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

வெனிசுலாவிலுள்ள எண்ணெய் வளத்துக்கு ஆசைப்பட்டே ட்ரம்ப் கல் யுகத்தில் செயல்படுவதுபோல் செயற்பட்டுள்ளார்.

ட்ரம்பின் நடவடிக்கைக்கு எதிராக நாம் போராட்டம் நடத்துவோம் . இடதுசாரி சக்திகளுடன் இணைந்து இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.” எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

அதேவேளை, வெனிசுலாவில் அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டை கண்டித்து, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று மாலை 4 மணிக்கு, முன்னிலை சோசலிசக் கட்சி ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

Related Articles

Latest Articles