ஆறுதல் வெற்றி கிட்டுமா? நாளை 3ஆவது டி20 போட்டி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை (03) நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியையேனும் இலங்கை பெற வேண்டும் என இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

அதன்பின்னர் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கான 2வது டி20 போட்டி கண்டி பல்லேகலேயில் நேற்று நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.

டக்வொர்த் லெவிஸ் முறைப்படி 17 ஓவரில் 168 ஓட்டங்கள் இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

இங்கிலாந்து 16.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்து டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

மூன்றாவது டி20 போட்டி இலங்கை நேரப்படி நாளை இரவு 7 மணிக்கு பல்லேகல மைதானத்தில் நடைபெறுகின்றது.

Related Articles

Latest Articles