தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முதலில் ஸ்ரீலீலா ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவித்தது படக்குழு. அவரைத் தொடர்ந்து சாய் பல்லவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்கள். தனுஷ் – சாய் பல்லவி ஜோடி ‘மாரி’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இருவரும் இணைந்து நடனமாடிய ‘ரெளடி பேபி’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே போல் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்தின் நாயகியும் சாய் பல்லவி தான். இருவருக்குமே விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்ததில் இருந்து நல்ல பழக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரியவுள்ளார். இதில் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் மம்முட்டி நடிக்க ஓப்பந்தமாகியுள்ளார். அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் சென்னையில் தொடங்கவுள்ளது.
