சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

தமிழில் போக்​கிரி, வில்​லு, கந்​த​சாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடன​மாடிய​வர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்​துள்ள இவர், ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார்.

சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க முடிய​வில்​லை. இந்​நிலை​யில் 7 வருடங்​களாக, தான் படுத்த படுக்​கை​யாக இருந்த​தாக​வும் 15 நாட்​கள் கோமா​வில் இருந்​த​தாக​வும் தெரிவித்துள்​ளார். ஏழு வருடங்​களுக்கு முன் வீட்​டுக்​குள் ஒரு விபத்தைச் சந்தித்​தார் முமைத் ​கான். அதில் அவர் மூளை​யில் 5 நரம்​பு​கள் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டன. இதனால் அவர் கோமா நிலைக்​குச் சென்​றார். 15 நாட்​கள் நடந்த தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு சுய நினைவு திரும்​பியது.

பின்​னர் அவருக்கு வலிப்பு ஏற்​பட்​ட​தால் படுத்த படுக்​கை​யா​னார். மருத்​து​வர்​கள் குறைந்த பட்​சம் ஏழு வருடங்​களுக்கு எந்த வேலையும் உடற்​ப​யிற்​சி​யும் செய்​யக் கூடாது என்று அறிவுறுத்தினர். அவர் எடுத்​துக் கொண்ட மருந்​துகள் அவரின் உடல் எடையை அதிகரிக்​கச் செய்​தன. இதனால் சினி​மா​வில் இருந்து வில​கி​னார்.

இப்​போது, ஹைத​ரா​பாத்​தில் ‘விலைக்’ என்ற என்ற மேக்​கப் மற்றும் சிகை அலங்​கார பயிற்சி அகாட​மியைத் தொடங்கியுள்ளார். இது அவரை வெற்​றிகர​மான தொழிலதிபராக மாற்றி இருக்​கிறது.

இது பற்றி முமைத்கான் கூறும்​போது, “நான் 13 வயதிலிருந்தே என் பெற்​றோருக்​காக உழைக்​கத் தொடங்​கி ​விட்​டேன். என் இளமைக்​ காலத்தை உழைப்​பில் செல​வழித்​த​தால், திரு​மணம் பற்றியோசிக்க நேரமில்​லை. கடவுள் எனக்கு எல்​லா​வற்​றை​யும் கொடுத்​தார், பிறகு அவரே எடுத்​துக்​கொண்​டார். இப்​போது மீண்டும் புதிய பாதையைக் காட்​டியிருக்கிறார்” என்றார்.

Related Articles

Latest Articles