சிட்னி பயங்கரவாதத் தாக்குதல்: இஸ்ரேல் ஜனாதிபதி கண்டனம்!

ஆஸ்திரேலியா, சிட்னி போண்டி கடற்கரை பகுதியில் கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன், மேற்படி தாக்குதலை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

ஆஸ்திரேலிய பெடரல் அரசின் வெறுப்பு எதிர்ப்பு சட்டங்களை அவர் வரவேற்றார்.

டிசம்பர் 14 அன்று நடத்தப்பட்ட தாக்குதல் “ஆஸ்திரேலியர்களை இலக்காகக் கொண்ட தாக்குதல்” என்றும், இஸ்ரேல் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் அதே வகையான அச்சுறுத்தலே இதுவும் என்றும் இஸ்ரேல் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

“உலகம் முழுவதும் தீவிரவாதம் செயல்படுகின்றது. துரதிர்ஷ்டவசமாக, இஸ்ரேல் பல ஆண்டுகளாக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது,” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 15 பேரில் சிலரின் பெயர்களையும் இஸ்ரேல் ஜனாதிபதி குறிப்பிட்டார். அதில் 10 வயது சிறுமி மடில்டா மற்றும் 87 வயதுடைய ஹோலோகாஸ்ட் உயிர்தப்பியவர் அலெக்ஸ் கிளைட்மன் ஆகியோரும் அடங்குவர்.

இஸ்ரேல் ஜனாதிபதி இன்று ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

Related Articles

Latest Articles