ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சந்தித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அது அரசியல் நாடகம் என்ற தொனியில் ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பெருந்தோட்டத் தொழிலாளர்களை நேற்று சந்தித்தமை தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த எஸ்.எம். மரிக்கார், தென்னிந்திய நடிகர்களே தோற்றுவிட்டனர். தோட்டத்திலுள்ள லயன் வீடொன்றுக்கு சென்று உணவு சாப்பிடும் படம் மட்டும் வெளிவரவில்லை. அதனை மறந்துவிட்டார்கள்போலும்.” – என்றார்.
