‘சுயம்பு’ படத்​தில் செங்கோல் வரலாறு: ஹீரோ நிகில் சித்தார்த்தா தகவல்

நடிகர் நிகில் சித்தார்த்தாவின் 20-வது படம் ‘சுயம்பு’. இதை பரத் கிருஷ்ண​மாச்​சாரி இயக்​கியுள்ளார். சம்​யுக்​தா, சுனில், அஜய், நபா நடேஷ் உள்பட பலர் நடித்​துள்​ளனர். தாகூர் மது வழங்க, பிக்​சல் ஸ்டுடியோ சார்​பில் புவன் மற்றும் கர் தயாரிக்​கின்​றனர்.

மெகா பட்​ஜெட்​டில் உரு​வாகி​யுள்ள இந்​தப் படத்​துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். ரவி பஸ்ரூர் இசையமைத்​துள்​ளார். ஏப்​.10-ம் தேதி வெளி​யாகும் இப்​படத்​தின் டீஸர் நேற்று வெளி​யிடப்​பட்​டது. ஹைத​ரா​பாத்​தில், இதற்​காக நடந்த விழா​வில், படம் பற்றி ஹீரோ நிகில் சித்​தார்த்தா கூறும்​போது, “இந்​திய வரலாற்​றின் சிறப்பு வாய்ந்த மற்​றும் தனித்​து​வ​மான அம்​ச​மான செங்கோலின் வரலாற்​றி​லிருந்து உரு​வான கதை​தான் இப்படம்.

இந்​திய நாடாளு​மன்​றத் தொடக்க விழா​வின் போது அங்கு செங்​கோல் நிறு​வப்​பட்​டதை அறிவோம். ஆனால் செங்​கோலுக்​குப் பின்​னால் உள்ள வரலாற்​றைப் பலர் அறிந்​திருக்​க​வில்​லை. இது நேர்​மை​யான, நெறி வழு​வாத ஆட்சியின் சக்​தி​யைக் குறிப்​பது. இந்த செங்​கோலுக்கு சோழ பேரரசு உள்​ளிட்ட இந்​தி​யப் பேரரசுகளில் அதிக முக்கி​யத்​து​வம் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

அதைச் சுற்​றி​யும் ஹீரோவைச் சுற்​றி​யும் உருவாக்கப்பட்டுள்ள கற்​பனை​யான கதை​தான் சுயம்​பு” என்று கூறி​யுள்​ளார். தெலுங்​கு, தமிழ், இந்தி உள்பட 5 மொழிகளில் உரு​வாகி​யுள்ள இப்​படம் 2 பாகங்​களாக வெளி​யாகிறது.இப்​படம் பற்றி இயக்​குநர் பரத் கிருஷ்ணமாச்​சாரி, “இது சில வரலாற்று நாயகர்​களைப் பற்​றிய கதை. ஆயிரம் ஆண்​டு​களுக்கு முன் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. உண்​மைச் சம்​பவங்​களின் பின்​னணி​யில் கற்​பனை கதை” என்று ஏற்​கெனவே கூறியிருந்​தார்.

Related Articles

Latest Articles