ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றவுள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சுழலால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்குரிய திட்டங்கள் தொடர்பில் தமதுரையில் ஜனாதிபதி தெளிவுபடுத்தவுள்ளார்.
இதுவரையிலும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் சபையில் ஜனாதிபதி விவரிக்கவுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது.
