ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பிரிட்டன் விமான தளங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரிட்டன் தற்போது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.
தற்காப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே ஆதரவு அளித்துவந்த பிரிட்டன், தற்போது ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்கும் அமெரிக்கத் தாக்குதல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
பிரிட்டன் ஆரம்பத்தில் அனுமதி வழங்காதது தொடர்பில் ட்ரம்ப் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
எனினும், பிராந்தியப் பாதுகாப்பையும் நட்பு நாடுகளின் நலன்களையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பில் ஈரான் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் தவறான முடிவை எடுத்துவிட்டார் எனவும் சாடியுள்ளது.
