ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump அறிவித்துள்ளார்.
ஈரானியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், அந்நாடு அணு ஆயுதங்களை உருவாக்காது என உறுதியளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அமெரிக்காவுடன் பேச்சு நடத்துவதை மறுத்துள்ள ஈரான், தங்களுக்கு அணு ஆயுதக் கொள்கை ஏதும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
அதேபோல போர் நிறுத்தம் தொடர்பில் ஈரான் தரப்பில் இருந்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.
