‘எரிபொருள் தட்டுப்பாடு’ – ஆஸ்திரேலியாவில் தேசிய அமைச்சரவைக் கூட்டம்!

மத்திய கிழக்கு போர்ச்சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவசர கால தேசிய அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சுமார் 470 எரிபொருள் நிலையங்கள் தட்டுப்பாட்டைச் சந்தித்துள்ள நிலையில், தேசிய அளவிலான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்பால் பணவீக்கம் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதால், அரசாங்கம் தனது அவசரக்கால இருப்பிலிருந்து எரிபொருளை விடுவிப்பதோடு புதிய சரக்குக் கப்பல்களையும் ஏற்பாடு செய்துள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த எரிபொருள் பங்கீடு மற்றும் வரிச் சலுகைகள் போன்ற பல்வேறு தீர்வுகளைத் தொழில்துறை அமைப்புகள் முன்மொழிந்துள்ளன.

பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள பீதியைக் குறைக்கவும், அத்தியாவசியத் தேவைகளுக்கான விநியோகத்தைச் சீராக வைத்திருக்கவும் அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நெருக்கடி ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் மற்றும் போக்குவரத்துத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles