ஈரானுக்கு ஆதரவான ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதால் மோதல் தற்போது தீவிரமடைந்துள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் இன்று 29 ஆவது நாளாக தொடர்கின்றது.
இந்த போர் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதித்து பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்பட்டுத்திவருகின்றது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இன்னும் சில வாரங்களில் ராணுவ நடவடிக்கைகள் நிறைவடையும் என்று கணித்துள்ள அதே வேளையில், கடல்வழிப் பாதைகளைப் பாதுகாக்கப் பிற நாடுகளின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளார்.
செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் போன்ற முக்கியமான வர்த்தக வழித்தடங்கள் முடக்கப்படும் அபாயம் இருப்பதால், இந்த போர் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.










