இஸ்ரேல் சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, அந்நாட்டில் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,286 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு நாளில் மட்டும் சுமார் 104 புதிய காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போது வரை காயமடைந்தவர்களில் 100 நபர்கள் தொடர் சிகிச்சையில் உள்ள நிலையில், மத்திய இஸ்ரேலில் ஏற்பட்ட சமீபத்திய பாதிப்புகள் இதில் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதில் அந்நாட்டு சுகாதாரத் துறை தற்போது முழுமையாக கவனம் செலுத்தி வருகிறது.










