போருக்காக நிதி வீணடிப்பு: திருத்தந்தை எதிர்ப்பு!

போருக்காக கோடிக்கணக்கான நிதியை வீணடிப்பதைக் திருத்தந்தை லியோ கடுமையாகச் சாடியுள்ளார்.

தங்களின் சுயநல அரசியல் மற்றும் பொருளாதார லாபத்திற்காக மதத்தைப் பயன்படுத்துபவர்களையும் அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

அழிவை ஏற்படுத்துவது எளிது என்றும், ஆனால் இழந்தவற்றை மீட்டெடுப்பது மிகவும் கடினமானது என்றும் திருத்தந்தை லியோ தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைதியை வழங்க வந்ததாகக் கூறிய அவர், கல்வி மற்றும் சுகாதாரத்தை விட ஆயுதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது குறித்து கவலை வெளியிட்டார்.

உருவாக்குமாறு உலகத் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles