லுணுகல பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா

லுணுகல பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொக்காகல, கீனகொட பகுதிகளில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரியின் பரிசோதனை அறிக்கையின்படி உறுதிப்படுத்தப்பட்டதாக லுணுகல பிரதேக
பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

குறித்த தொற்றாளர்கள் கொழும்பிலிருந்து வருகை தந்தவர்களென்றும் இவர்கள் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்படி லுணுகல பிரதேசத்தில் இதுவரை 08 பேர் தொற்றாளர்களாக உறுதிபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles