ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தற்போது மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பயணம், இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்புத் தலைவர் Ebrahim Azizi தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது எவ்வித அணுசக்தி பேச்சுவார்த்தைகளும் நடைபெறாது என்றும், அத்தகைய விவாதங்கள் ஈரானின் மீறமுடியாத சிவப்புக் கோடாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்துமாறு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் சூழலில் இந்த விளக்கம் வெளிவந்துள்ளது.
ஈரானியப் பிரதிநிதிகள் தங்களின் இராணுவ மற்றும் அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், இந்தப் பயணம் வெறும் நட்புறவு சார்ந்தது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.










