நெருப்பாகிறது ஆஸ்திரேலியா! இறப்பு எண்ணிக்கை 24 மடங்காக அதிகரிக்கும் அபாயம்!!

ஆஸ்திரேலியாவில் நிலவும் கடுமையான வெப்ப அலைகளால் ஏற்படும் உயிரிழப்புகள் வரும் 2100-ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு 6000-ஆக உயரும் என மொனாஷ் பல்கலைக்கழக ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தற்போதைய இறப்பு விகிதத்தை விட 24 மடங்கு அதிகமாகும் என்றும், குறிப்பாக வடக்குப் பகுதிகளில் இந்த பாதிப்பு மிகத் தீவிரமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இந்த அச்சுறுத்தல் இதய மற்றும் சுவாச நோய்களைத் தூண்டி பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக மருத்துவ வசதிகள் மற்றும் குளிரூட்டும் வசதிகள் குறைவாக உள்ள பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

எனவே, இந்த உயிரிழப்புகளைத் தடுக்க முறையான தற்காப்பு நடவடிக்கைகளும் மற்றும் உள்ளூர் அளவிலான தழுவல் உத்திகளும் உடனடியாகத் தேவைப்படுகின்றன.

2016 மற்றும் 2019-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் வெப்ப அலைகளால் ஆண்டுக்கு சராசரியாக 250 பேர் உயிரிழந்தனர். ஆனால், கண்டத்தின் வெப்பம் வேகமாக அதிகரித்து வருவதால், இந்த எண்ணிக்கை நூற்றாண்டின் இறுதியில் 5,913 ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தில் (Northern Territory) வெப்ப அலை இறப்பு விகிதம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு 4,412 சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

Related Articles

Latest Articles