பண்டாரவளை பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் பெய்த கன மழையின் காரணமாக பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கடும் மழையினால் நகரில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.வர்த்தக நிலையங்களுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்ததால் விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன.
பதுளை மாவட்டத்தில் காற்றுடன் கனமழை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் மக்கள் அச்சத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர்.
பசறை நிருபர்










