குவைத் விமானநிலையம்மீது ஈரான் நடத்திய தாக்குதல் 3 இலங்கையர்கள் காயம்!

குவைத் சர்வதேச விமான நிலையம்மீது ஈரான் நேற்று நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று இலங்கையர்களும் காயமடைந்துள்ளனர்.

குவைத்திலுள்ள இலங்கைத் தூதுரகம் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

மூவருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மூன்று இலங்கையர்களும் அங்கு மின்தூக்கி பழுதுபார்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணியாற்றிவந்துள்ளனர் என தெரியவருகின்றது.

ஈரான் நேற்று நடத்திய மேற்படி தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 63 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles