இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உலக சுங்க அமைப்பு பாராட்டு!

உலக சுங்க அமைப்பின் ஊழல் ஒழிப்பு மற்றும் நேர்மையை மேம்படுத்தும் திட்டத்தை செயற்படுத்தும் ஆண்ட்ரியா ஹாம்ப்டன் (Andrea Hampton) தலைமையிலான, அந்த அமைப்பின் நேர்மையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப உபகுழுவின் மூவர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினர், ஜூன் மாதம் 2 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவைச் சந்தித்தனர்.

இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்துள்ள இப்பிரதிநிதிகள் குழுவினர், அரச துறையில் நேர்மையை மேம்படுத்துதல், நல்லாட்சியை வலுப்படுத்துதல் மற்றும் ஊழல் ஒழிப்பு முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தினால் செயற்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடினர்.

பிரதிநிதிகள் குழுவிடம் உரையாற்றிய கலாநிதி குமாநாயக்க, ஊழலை ஒழிப்பதற்காக அரசாங்கம் வழங்கியுள்ள உயர்மட்ட முன்னுரிமைக்கு இணங்க, ஒழுக்கநெறிமிக்க, பொறுப்புக்கூறல் உடைய மற்றும் ஊழலற்ற அரச சேவையொன்றைக் கட்டியெழுப்புவதற்காக உள்விவகாரப் பிரிவுகளினால் ஆற்றப்படும் முக்கிய பங்கை வலியுறுத்தினார்.

இதற்கென ஒரு பிரிவு ஜனாதிபதி அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் உள்விவகாரப் பிரிவுகளை நிறுவுதல், அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்தல் மற்றும் அந்தப் பிரிவுகளின் செயல்பாடுகளை முறைமைப்படுத்துவதற்கும் இலகுபடுத்துவதற்கும் இணையக் கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதற்காக செயல்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நிறுவனங்களுக்குள்ளும் அரச அதிகாரிகளுக்கு இடையேயும் ஊழலற்ற கலாசாரத்தை உருவாக்குவதற்காக, அரச துறை முழுவதும் உள்விவகாரப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் குறித்து உலக சுங்க அமைப்பின் பிரதிநிதிகளுக்கு விரிவான அறிமுகமொன்று வழங்கப்பட்டது.

இதுவரை, அனைத்து துறைசார் அமைச்சுகள், மாகாண தலைமைச் செயலகங்கள், திணைக்களங்கள், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களில் 360 உள்விவகாரப் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த வருடத்திற்குள் எஞ்சிய அரச நிறுவனங்களுக்கும் உள்விவகாரப் பிரிவுகளை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், இதில் அனைத்து பிரதேச செயலகங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அலுவலகத்தினால் ஒருங்கிணைக்கப்படும் பயிற்சித் திட்டங்களின் ஊடாக, உள்விவகாரப் பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள், ஊழல் அபாய மதிப்பீடுகள் மற்றும் அபாய முகாமைத்துவத் திட்டங்களை தயாரித்தல் மற்றும் ஏனைய நேர்மைத்தன்மையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கும், அரச துறையின் நேர்மைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகம் இணையவழி தளத்தையும் உருவாக்கியுள்ளது.

இத்தளமானது உள்விவகாரப் பிரிவுகளின் முறைப்பாடுகளைக் கையாளுதல், செயல்பாட்டுத் திட்டங்களை அறிக்கையிடல் மற்றும் கண்காணித்தல், கூட்டங்களை ஒருங்கிணைத்தல், பயிற்சிகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் தரவுப் பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு வகையான செயல்பாடுகளைச் சுயாதீனமாக நிர்வகிப்பதற்கான திறனை வழங்குகிறது.

நாடு முழுவதும் உள்ள உள்விவகாரப் பிரிவுகளின் தரவுகளை மத்தியமயப்படுத்தப்பட்ட முறையில் ஒருங்கிணைப்பதன் மூலம், அரச துறையின் ஊழல் போக்குகள் மற்றும் ஊழல் எதிர்ப்புத் தரநிலைகளுக்கு இணங்குதல் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதற்கு இந்த இணையத்தளம் வழிவகுக்கிறது.

உள்விவகாரப் பிரிவுகளை நிறுவுவதன் நோக்கங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தினால் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள், உலக சுங்க அமைப்பின் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான ஹாம்டன் (Hampton) அவர்களின் பாராட்டைப் பெற்றன. உள்விவகாரப் பிரிவுகளின் இணையவழி முறையீட்டு முகாமைத்துவ அமைப்பானது,

இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு அதன் உள்நாட்டுக் கட்டுப்பாட்டு வழிமுறைகளையும் ஊழல் ஒழிப்புத் திறன்களையும் வலுப்படுத்துவதற்கு ஒரு பெறுமதிமிக்க வாய்ப்பை வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த இணையவழி அமைப்பின் மூலம் உருவாக்கப்படும் தரவுகள், சுங்க நிர்வாகத்திற்குள் இருக்கும் ஊழல் அபாயங்கள் மற்றும் நேர்மைக்கான அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அவற்றைக் குறைப்பதற்கும், அதன் மூலம் மிகவும் பயனுள்ள சுங்கச் செயல்பாடுகளுக்குப் பங்களிப்பதற்கும் எவ்வாறு உதவுகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரச நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நேர்மை ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திறமையான நடைமுறைகள் பற்றிய கருத்துப் பரிமாற்றங்களும் இக்கலந்துரையாடலில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

ஹாம்டன் மற்றும் உலக சுங்க அமைப்பின் பெஸ்கல் தோமஸ் (Pascal Thomas), பூட்விஜன் குரோன்வெல்ட் (Boudewijn Groeneveld) ஆகியோரும், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்களான சானகி எச். ரணதுங்க, தனுஷ்க பெரேரா மற்றும் டி. என். அமோன் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles