இலங்கை அணி முன்னிலை: மழையால் கைவிடப்பட்டது 2ஆவது போட்டி!

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

சபினா பூங்காவில் நடைபெறவிருந்த இந்த போட்டி, தொடர் மழையினால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்த போதிலும், மோசமான வானிலை காரணமாக ஆட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.

இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தத் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ள போதிலும், அடுத்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் நிலையில் உள்ளது.

தரவரிசையை உயர்த்தி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அந்த அணிக்கு, வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டி மிகவும் முக்கியமானதாகும்.

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles