51,594 பேருக்கு கொரோனா – 44,746 பேர் குணமடைவு – 255 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 487 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 ஆயிரத்து 593 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 255 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் 2020 மார்ச் முதல் இன்றுவரை 51 ஆயிரத்து 594 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles