நாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 800ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 44 ஆயிரத்து 746 பேர் குணமடைந்துள்ளனர். 255 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 48 ஆயிரத்து 153 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.