பசறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பது/கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு
2026 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களிடையே ஜனநாயகப் பண்புகள், தலைமைத்துவத் திறன், பொறுப்புணர்வு மற்றும் நல்லாட்சிக் கருத்துக்களை வளர்க்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் பாடசாலையின் அதிபர் தலைமையேற்று உரையாற்றியதுடன், மாணவர் பாராளுமன்றத்தின் புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சபாநாயகர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தமது பொறுப்புகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.
இதன் பின்னர் நடைபெற்ற கன்னி அமர்வில் பாடசாலையின் கல்வி முன்னேற்றம், ஒழுக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை, விளையாட்டு மற்றும் மாணவர் நலன் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து மாணவர்கள் கருத்துகளை முன்வைத்து கலந்துரையாடினர்.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டு மாணவர் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் சிறப்புற அமைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மாணவர்களின் தலைமைத்துவம், பேச்சுத்திறன், முடிவெடுக்கும் ஆற்றல் மற்றும் பொது நிர்வாகம் தொடர்பான அறிவை மேம்படுத்தும் வகையில் இந்த மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு பயனுள்ளதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
த.டிமேஷன்










