உங்களது எதிர்காலத்தை பிரகாசமாக மாற்றக்கூடிய, 2027 இல் மிக அதிக தேவையுள்ள ஒரு துறையைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பு இதோ! உடனடி வேலை மற்றும் முன்பதிவு செய்யும் அளவிற்கு டிமாண்ட் நிறைந்த துறைகள் பற்றிய செய்தி இது.
இலங்கையின் வேகமாக விரிவடைந்து வரும் கட்டுமானத் துறை கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது என்றும், இதனால் வெளிநாடுகளில் இருந்து திறன் பணியார்களை (skilled workers) வேலைக்கு அமர்த்த வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்படலாம் என்று கட்டுமானத்துறை பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதி அமைச்சர், மின்சார வல்லுநர்கள் (Electricians) மற்றும் வெல்டர்கள் (Welders) போன்ற நிபுணத்துவம்மிக்க கைவினைஞர்களைக் கண்டறிவது மேன்மேலும் கடினமாகி வருவதாகவும், அதிகரித்துவரும் தேவை காரணமாக அவர்களில் பலர் பல வாரங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கட்டுமானத் துறை, குறிப்பாக கொழும்பு நகர்ப்புறத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்குள் நாட்டிற்கு மேலும் 10,000 இற்கும் மேற்பட்ட திறன் பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என மதிப்பிட்டுள்ளார்.
அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக, அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஆயிரக்கணக்கான திறமையான தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பது அமைச்சின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று என்றும் சரத் கூறினார்.
இருப்பினும், புதிதாகப் பயிற்சி பெற்ற பல தொழிலாளர்கள் தங்களது பயிற்சியை முடித்தவுடன் தென் கொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையை விட்டு வெளியேறுவதாகவும், இதனால் திறன் பணியாளர்களை நாட்டில் தக்கவைத்துக் கொள்வது கடினமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“உள்ளூரில் தேவையை எம்மால் பூர்த்தி செய்ய முடியாவிட்டால், வெளிநாடுகளில் இருந்து திறமையான தொழிலாளர்களை நாம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்” என்று அவர் கூறினார்.
இலங்கையின் முடுக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டுமான நடவடிக்கைகளே திறன் தொழிலாளர்களுக்கான தேவை அதிகரிப்பதற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், தற்போது தெற்காசியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என்றும் உரிமை கோரினார்.










