உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றதைக் கொண்டாடிய போது, வடமேற்கு ஸ்பெயினின் சலமன்கா (Salamanca) மாகாணத்தில் நீரூற்றின் (Fountain) ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 13 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சலமன்காவின் சியூடட் ரொட்ரிகோ (Ciudad Rodrigo) பகுதியில் உள்ள ‘ஆர்போல் கோர்டோ’ (Árbol Gordo) நீரூற்றுப் பகுதிக்குள் இறங்கி பொதுமக்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே, உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 00:30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் மேலும் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக அவசர சேவைகள் பிரிவு பிபிசிக்குத் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் ஒரு சிறுவனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொண்டாட்டத்தின் போது சிலர் நீரூற்றின் மீது ஏறியதால் அதன் கட்டமைப்பு தாங்க முடியாமல் பகுதியளவில் இடிந்து விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“ஸ்பெயின் தேசிய கால்பந்து அணியின் உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் ஒரு மகிழ்ச்சியான தருணமாக அமைய வேண்டிய ஒன்று, தற்போது பெரும் துயரமாக மாறியுள்ளது” என சியூடட் ரொட்ரிகோ நகர சபை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளது.










