இன்னும் 2 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன் – அர்ச்சுனா எம்.பி உருக்கம்

“இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மட்டுமே நான் இந்த நாடாளுமன்றத்தில் இருப்பேன். இங்கிருந்து நான் சென்ற பிறகு உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது” என்று யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு உருக்கமாகத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவிக்கையில்:

“கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது, 7 கோப்புகளுடன் (Files) ஊழல்களை வெளிப்படுத்த வந்த என்னை, திட்டமிட்ட அடிப்படையில் படுகேவலமாக விமர்சித்து வெளியேற்ற முற்பட்டனர்.

மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்திற்குத் தேர்வான என்னை, தேசியப் பட்டியலின் மூலம் வந்தவர் விமர்சிக்கின்றார். நான் யாரையும் தாக்கவில்லை. ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் பல முறைப்பாடுகளைச் செய்தும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை.

மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களில் ஊழல்களைச் சுட்டிக்காட்ட முற்படும் போது, குண்டர் குழுவினர் எம்மைத் தாக்க முற்படுகின்றனர். எனக்கு உரிய பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. துப்பாக்கி அனுமதி வழங்கினார்கள், ஆனால் அதனை வெளியில் எடுத்தாலும் வழக்குத் தொடர்கின்றனர்.

என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதற்காக நபரொருவர் வழக்குத் தொடுத்துள்ளார். வடக்கிலிருந்து சுயாதீனமாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வருவது சிங்கள மக்களுக்கு விருப்பமில்லை என்ற தவறான தகவலையே இந்த நடவடிக்கை எமது மக்களுக்கு வழங்கும்.

நான் இந்த நாடாளுமன்றத்தில் அதிக காலம் இருக்கப்போவதில்லை. உங்களை நீண்ட காலத்திற்குத் தொந்தரவு செய்ய மாட்டேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் மட்டுமே இங்கு இருப்பேன்” என அர்ச்சுனா இராமநாதன் மேலும் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles