கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் இன்று மதியம் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.
நான்கு சிறுவர்கள் இணைந்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. ஏனைய மூன்று சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாகக் மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல்போன சிறுவனைத் தேடும் பணிகளில் பிரதேசவாசிகளும் கம்பளை பொலிஸாரும் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
க.யோகா
