2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மாணவர்கள் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை (Writ petition) மேல்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.
தற்போது 2026 ஓகஸ்ட் மாதத்தில் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பரீட்சையை ஒத்திவைக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தை கோரியிருந்தனர்.
வரவிருக்கும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றத் தயாராகிவரும் மாணவர்கள் குழுவொன்றினால், பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற வாதத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இருப்பினும், இந்த மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், திட்டமிட்டபடி பரீட்சை நடைபெற அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, க.பொ.த உயர்தரப் பரீட்சை 2026 ஓகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளது.










