இந்திய அணியின் தொடக்க வீரரான வைபவ் சூர்வன்ஷி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் 18 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் இளம் வயதில் (15 வயது, 118 நாட்கள்) அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன்னர் இளம் வயதில் அரை சதம் அடித்த சாதனையை நேபாளத்தின் குஷால் மல்லா (15 வயது 340 நாட்களில்) நிகழ்த்தியிருந்தார். இதை தற்போது முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் சூர்யவன்ஷி.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.










