கட்டுக்கடங்காத காட்டுத் தீ: பிரான்ஸ், ஸ்பெயினில் 270,000 பேர் வெளியேற்றம்!

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளிலும் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில், பிரான்சில் 2,00,000 பேரும், ஸ்பெயினில் சுமார் 70,000 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர்.

மேற்கு ஐரோப்பாவில் இந்த கோடைகாலத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை நிலவுவது தீயைக் கட்டுப்படுத்துவதைக் கடினமாக்கியுள்ளது.

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸின் சில பகுதிகளில் காட்டுத்தீ வீரியமாகப் பரவி வருவதால், வெளியேற்ற உத்தரவுகள் காரணமாக சுமார் 2,70,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினின் பெரும்பாலான பகுதிகளில் மிகவும் வறண்ட வானிலை மற்றும் சராசரியை விடக் குறைவான மழைப்பொழிவு ஆகிய காரணங்களால் தாவரங்கள் மிகவும் வறண்டு தீப்பிடிக்கும் அபாயத்தில் உள்ளதாகவும், பலத்த காற்று தீயை மேலும் விசிறி விடுவதாகவும் BBC விளக்கியுள்ளது.

மேலும், வழக்கத்திற்கு மாறாக அதிக மழை பெய்த குளிர்காலம் தாவரங்கள் விரைவாக வளரக் காரணமானது. அந்தத் தாவரங்கள் தற்போது கோடை வெப்பத்தில் உலர்ந்துபோய், காட்டுத்தீ மேலும் பரவுவதற்கு ஏதுவான எரிபொருளாக மாறியுள்ளன.

Related Articles

Latest Articles