நேற்று நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், வினாத்தாள்கள் தாமதமாக வழங்கப்பட்டதால் தங்களது பிள்ளைகள் அநியாயமாக பாதிக்கப்பட்டதாகக் கூறி, பெற்றோர் குழுவொன்று கிரிந்திவெல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.
கிரிந்திவெல போகஹவத்த ஜினானந்த ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள், கிரிந்திவெல மத்திய கல்லூரியில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
பெற்றோரின் கூற்றுப்படி, மாணவர்களுக்கு வினாத்தாள் காலை 11.15 மணிக்கு வழங்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் அது சுமார் 11.30 மணியளவில் மட்டுமே வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வினாத்தாள் 12.15 மணிக்கு மீண்டும் சேகரிக்கப்பட்டதாகவும், இதனால் மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை நேரத்தில் சுமார் 30 நிமிடங்களை இழந்ததாகவும் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த தாமதம் தங்களது பிள்ளைகளை மற்ற மாணவர்களுடன் ஒப்பிடும்போது பெரும் பின்னடைவுக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவித்த பெற்றோர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, கம்பஹா வலயக் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் பரீட்சை நிலையத்திற்குச் சென்று பெற்றோருடன் கலந்துரையாடியுள்ளார்.
எனினும், பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாததைத் தொடர்ந்து, பெற்றோர் கிரிந்திவெல பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
