55 வயது நபரின் சிறுநீர்ப்பையிலிருந்து 3.1 கிலோ கல் அகற்றம்: திருகோணமலையில் வைத்தியர்கள் சாதனை

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளி ஒருவரின் சிறுநீர்ப்பையிலிருந்து (Bladder) 3.1 கிலோகிராம் (6.8 இறாத்தல்) எடையுள்ள மிகப்பெரிய கல் ஒன்றை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

இது உலகிலேயே அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட மிகப்பெரிய சிறுநீர்ப்பை கல் எனக் கருதப்படுகிறது.

பக்கவாதப் (Stroke) பாதிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 55 வயதுடைய நோயாளி ஒருவருக்கு, சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுநீர்ப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையின் போது, முழு வளர்ச்சி அடைந்த ஒரு குழந்தையின் எடையையும், நெருப்புக்கோழி முட்டையின் அளவையும் கொண்ட இக்கல் அகற்றப்பட்டது.

“தற்போதுள்ள உலகப் பதிவுகளின்படி, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கல் இதுவாகும்” என இந்த அறுவை சிகிச்சையை முன்னின்று நடத்திய டாக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், நோயாளி தற்போது “மிகவும் ஆரோக்கியமான நிலையில்” இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நோயாளி தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கி, தனது ஏனைய மருத்துவப் பாதிப்புகளுக்கான சிகிச்சைகளைப் பெற்று வருகிறார். இக்கல் நோயாளியின் சிறுநீர்ப்பையில் சுமார் 5 முதல் 10 ஆண்டுகள் வரை வளர்ந்திருக்கக் கூடும் என்றும் டாக்டர் பிரகலாதன் மேலும் தெரிவித்தார்.

சிறுநீர்ப்பைக் கல் எவ்வாறு உருவாகிறது?

சிறுநீரில் உள்ள தாதுக்கள் படிகமாகி (Crystallise) திடமான கட்டிகளாக மாறுவதன் மூலம் இவை உருவாகின்றன. சிறுநீர்ப்பை முழுமையாகக் காலியாகாத போது, எஞ்சியிருக்கும் செறிவூட்டப்பட்ட சிறுநீர் படிகங்களாக மாறுவது இதன் பொதுவான காரணமாகும்.

மணல் துகள் அளவிலான சிறிய கற்கள் இயல்பாகவே வெளியேறிவிடும். ஆனால் 1 சென்டிமீட்டருக்கு மேல் உள்ள கற்கள் சிறுநீர் பாதையை அடைத்து மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையை ஏற்படுத்துகின்றன. 4 சென்டிமீட்டருக்குப் பெரிய கற்கள் ‘ராட்சதக் கற்கள்’ (Giant stones) எனக் கருதப்படுகின்றன.

கின்னஸ் உலக சாதனை முறியடிப்பு

கின்னஸ் உலக சாதனைகளின்படி (Guinness World Records), இதற்கு முன்னர் 2003-ஆம் ஆண்டு பிரேசிலில் நோயாளி ஒருவரிடமிருந்து அகற்றப்பட்ட 1.9 கிலோகிராம் எடையும் 17.9 சென்டிமீட்டர் நீளமும் கொண்ட கல்லே உலகின் மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கல்லாகப் பதிவாகியிருந்தது.

தற்போது இலங்கையில் அகற்றப்பட்ட இக்கல் சுமார் 17 சென்டிமீட்டர் நீளமும் 3.1 கிலோகிராம் எடையும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles