விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்: செப். 9 ஆம் திகதியளவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியீடு

2026 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக நாடு முழுவதும் 48 மதிப்பீட்டு மையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

380 மதிப்பீட்டு குழுக்களின் கீழ் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படும்.

எதிர்வரும் செப்டம்பர் 09 ஆம் திகதியளவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது கடந்த 09 ஆம் திகதி நாடு முழுவதும் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.

Related Articles

Latest Articles