தெற்காசியாவில் அண்டை நாடுகள் அனைத்தினதும் நன்மதிப்பைப் பெற்ற ஒரே நாடு இலங்கை! – Pew ஆய்வு

தெற்காசிய நாடுகளின் மக்கள், தங்கள் அண்டை நாடுகளை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது தொடர்பாக Pew Research Center நடத்திய புதிய கருத்துக்கணிப்பில், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளிலும் எதிர்மறையான கருத்துகளை விட அதிகமான நேர்மறையான கருத்துகளைப் பெற்ற ஒரே நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.

இந்த ஆய்வு 2026 பெப்ரவரி 8 முதல் மே 7 வரை நடத்தப்பட்டது. இதில் இந்தியாவில் 3,566 பேர், பாகிஸ்தானில் 1,039 பேர், பங்களாதேஷில் 1,044 பேர் மற்றும் இலங்கையில் 2,513 பேர் பங்கேற்றனர்.

இலங்கை குறித்த பார்வையில், பாகிஸ்தானியர்களில் 51%, இந்தியர்களில் 49%, பங்களாதேஷியர்களில் 47% பேர் சாதகமான கருத்தை தெரிவித்துள்ளனர். இந்த மூன்று நாடுகளிலும் இலங்கை குறித்த எதிர்மறையான கருத்துகள் சாதகமான கருத்துகளை விட குறைவாகவே பதிவாகியுள்ளன.

அதேவேளை, இலங்கையர்கள் இந்தியாவை மிகவும் சாதகமாகப் பார்க்கின்றனர். 79% இலங்கையர்கள் இந்தியா குறித்து நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளனர். மேலும், உலக விவகாரங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சரியான முடிவுகளை எடுப்பார் என்ற நம்பிக்கையை 70% இலங்கையர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதற்கு மாறாக, இந்தியா குறித்து பாகிஸ்தானில் சாதகமான பார்வை மிகவும் குறைவாக உள்ளது. பாகிஸ்தானியர்களில் வெறும் 7% பேர் மட்டுமே இந்தியாவை சாதகமாகப் பார்க்கின்றனர். பங்களாதேஷில் அந்த எண்ணிக்கை 42% ஆக உள்ளது.

மேலும், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இடையேயான பரஸ்பர நன்மதிப்பும் அதிகரித்துள்ளது. 66% பாகிஸ்தானியர்கள் பங்களாதேஷை சாதகமாகவும், 54% பங்களாதேஷியர்கள் பாகிஸ்தானை சாதகமாகவும் பார்க்கின்றனர். இலங்கையர்களிடையே பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் குறித்த நல்ல அபிப்பிராயமும் 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயர்ந்துள்ளது.

இந்த முடிவுகளின் அடிப்படையில், இந்தியா–பாகிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய அரசியல் முரண்பாடுகள் நிறைந்த தெற்காசியாவில், பல்வேறு நாடுகளின் மக்களிடையே ஒரே நேரத்தில் நன்மதிப்பைப் பெற்றுள்ள நாடாக இலங்கை தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது என்று Pew ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles